என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவன் உடல் மீட்பு"
- பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அதிக அளவு நீர் வந்து கொண்டு இருக்கிறது.
- போலீசார் திரிசனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த மோரை, அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் குமார். இவரது மகன் திரிசன்(13). இவர், வீராபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று காலை திரிசனம் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான சுனில்குமார் என்பவருடன் மோரை சுடுகாடு அருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் குளித்தனர்.
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால் அதிக அளவு நீர் வந்து கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் தண்ணீரின் வேகத்தில் திரிசன் அடித்து செல்லப்பட்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர் சுனில்குமார் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து திரிசனின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆவடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் நேற்று இரவு வரை தேடியும் திரிசனை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் தேடும்பணி நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை மோரை வீராபுரம் முருகன் கோயில் அருகே கிருஷ்ணா கால்வாயில் மாணவன் திரிசனின் உடல் பிணமாக மிதந்தது. இதனை கண்டு பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. போலீசார் திரிசனின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்